திருவருகைக்கால இரண்டாம் வார புதன்
கிதியோன்
வாசகம்: நீதித்தலைவர்கள் 6-8
சிந்தனை:
பெரும்பாலும் கடவுள் பலவீனமானவர்களை பெரிய காரியங்களைச் செய்ய தேர்ந்தெடுக்கிறார், மிதியானியர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட மக்களைக் காக்கும் பொருட்டு கிதியோனும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். முதலில் கடவுள் விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த கிதியோன் 'நான் உன்னுடன் இருப்பேன்' (நீதி 6:16) என்று கடவுள் கூறியதன் விளைவாக அவர் சிறிய இராணுவப் படையைக் கொண்டு போரில் வெற்றி கண்டார்! கிதியோனின் வெற்றியானது கடவுள் வலிமையும் வல்லமையும் கொண்டவர் என்பதை அவருடைய மக்களுக்குக் காட்டியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுள் தனது மக்களைக் காப்பாற்ற, பாவ இருளுக்கு எதிரான போரில் தம் மக்களை வழிநடத்தும் ஒரு சிறு குழந்தையாக அவர் தம் மகன் இயேசுவை அனுப்பினார்... அவரும் வெற்றி பெறுவார்!
நம்முடைய பலவீனங்களுக்கு மத்தியில் கடவுளின் அழைப்பை உணர்ந்து அவரது குரலுக்கு செவிசாய்த்தால் நாமும் வாழ்வில் வெற்றி பெறுவோம் என்பதை உணர்ந்து செயல்படும் நாள் இந்நாள்.
செபம்:
உன்னதரான கடவுளே, நீர் எங்களுக்காக எங்களது வாழ்க்கைப் போராட்டங்களில் போரிடுகிறீர். நீர் கிதியோனுடன் இருந்ததைப் போலவே, எப்போதும் எங்களுடன் இருக்கிறீர். உம்மை முழுவதுமாக நம்புவதன் மூலம் எங்களுக்கு வெற்றியை அளித்தருளும். ஆமென்.